இரண்டு குழுக்களுக்கிடையில்
இடம்பெற்ற மோதலில்
துப்பாக்கி சூடு நடத்தியவர்
துப்பாக்கியுடன் கைது...
சம்மாந்துறை பொலிஸ் பிரிவில்
சம்பவம்
இரண்டு
குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற ஒரு
பிரச்சினையின் போது துப்பாக்கி சூடு நடாத்திய
சந்தேக நபர்
ரீ-56 ரக
துப்பாக்கியுடன் கைதாகியுள்ளார்.
இச்சம்பவம்
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராமத்தில் கடந்த 20 ஆம் திகதி திங்கட்கிழமைஇரவு 9.30 மணியளவில் இடமெற்றுள்ளது.
சம்பவ இடத்தில் துப்பாக்கி சூடு
ஒன்று இடம்பெற்றதாக
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய
கிழக்கு மாகாண
சிரேஷ்ட பொலிஸ்மா
அதிபர் நிலந்த
ஜெயவர்த்தனவின் கட்டளைக்கமைய அம்பாறை மாவட்ட பிரதிப்
பொலிஸ் மா
அதிபர் அயாஷ
கருணாரத்தினவின் மேற்பார்வையில் அம்பாறை மாவட்ட பொலிஸ்
அத்தியட்சகர் எம்.ஜெயந்த ரத்னாயக்க நெறிப்படுத்தலில்
கல்முனை பிராந்திய
பொலிஸ் அத்தியட்சகர்
புத்திக்க ஜெயசுந்தரவின்
நேரடிக் கண்காணிப்பில்
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜயலத் தலைமையில்
சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பொறுப்பதிகாரி விஜயராஜா குழுவினர் துப்பாக்கி
சூடு இடம்பெற்று
24 மணித்தியாலங்களுக்குள்(செவ்வாய்க்கிழமை(21) 26 வயதுடைய சந்தேக நபரையும் துப்பாக்கி
சூட்டை மேற்கொண்டு
மறைத்து வைத்திருந்த
ரீ 56 ரக
துப்பாக்கி மற்றும் 9 ரவையுடன் கூடிய ரவைக்கூட்டையும்
மீட்டுள்ளனர்.
குறித்த
சம்பவத்தின் போது இரு துப்பாக்கி வேட்டுக்களை
சந்தேக நபர்
தீர்த்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையின் இருந்து தெரிய
வந்துள்ளது.
சந்தேக
நபரை இன்று புதன்கிழமை(22) சம்மாந்துறை நீதவான்
நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.