மன்னாரில் விபத்தில் உயிரிழந்த
சகோதரிகள் இருவரின் உடல் நல்லடக்கம்!
மன்னாரில்
இடம்பெற்ற விபத்தில்
உயிரிழந்த சகோதரிகள்
இருவரினதும் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
மன்னார்-மதவாச்சி பிரதான
வீதி, பரப்பாங்கண்டன்
பகுதியில் நேற்று முன் தினம் மதியம்
2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் சகோதரிகளான இரு
பெண்கள் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்தனர்.
மன்னாரில்
இருந்து சென்ற
மோட்டார் சைக்கிளும்,
மன்னார் நோக்கி
வந்த கெப்
ரக வாகனமும்
மோதியதில் மோட்டார்
சைக்கிளில் பயணித்த குறித்த இரு பெண்களும்
உயிரிழந்தனர்.
40 வயதான
சந்தியோகு லிண்டா
மற்றும் 25 வயதான சந்தியோகு டெரன்சி ஆகியோரே
இவ்வாறு உயிரிழந்தனர்.
குறித்த
இருவரும் மன்னாரில்
இருந்து கட்டையடம்பன்
பகுதியில் உள்ள
அவர்களுடைய வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த
போதே இந்த
விபத்து இடம்
பெற்றுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.