மட்டக்களப்பு மாவட்ட
கிராம உத்தியோகத்தகள்
பணி பகிஸ்கரிப்பு
ஓட்டமாவடி
பிரதேச செயலக
பிரிவின் காகிதநகர்
கிராம சேவை உத்தியோகத்தர் கடந்த
வெள்ளிக்கிழமை காகிதநகர் பிரதேசத்திற்கான சிறிலங்கா பொதுஜன
பெரமுனவின் பிரமுகரால் தாக்கப்பட்டதை கண்டித்து மட்டக்களப்பு
மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம சேவை
அதிகாரிகளும் நேற்று மதியம்
தொடக்கம் பணி
பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த
வெள்ளிக்கிழமை மாலை தாக்கப்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர் தொடர்பில் தாக்கியவரை இதுவரை
கைது செய்யப்படாத
நிலையில் மட்டக்களப்பு
மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமசேவை உத்தியோகத்தர்களும்
பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக மட்டக்களப்பு
மாவட்ட கிராம
உத்தியோகத்தர்கள் சங்கம்
அறிவித்துள்ளது.
இதேவேளை
பாதிக்கப்பட்ட கிராம சேவை உத்தியோகத்தர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில்
தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.