இழிவான கருத்துக்கு மகா சங்கத்தினரிடம்
பொது மன்னிப்புக் கோர
ராஜாங்க அமைச்சர் ரஞ்சன்
ராமநாயக்கவுக்கு
விடுக்கப்பட்டுள்ள 24 மணிநேர காலக்கெடு!
பௌத்த
தேரர்கள் தொடர்பில்
ராஜாங்க அமைச்சர்
ரஞ்சன் ராமநாயக்க
வெளியிட்ட இழிவான
கருத்துக்கு மகா சங்கத்தினரிடம் பொது மன்னிப்புக்
கோரவேண்டுமெனவும் அதற்கு 24 மணி நேர கால
அவகாசம் வழங்குவதாகவும்
சிங்களே அமைப்பின்
பொதுச் செயலாளர்
மடில்லே பஞ்ஞாலோக
தேரர் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது
நாட்டில் கூக்குரல்
இட்டுத் திரியும்
90 இற்கும் அதிகமான பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு
உட்பட்டவர்கள் எனவும் அதனால் மன அழுத்தங்களுக்கு
உட்பட்டதனாலேயே இவ்வாறு தேரர்கள் குரோதத்துடன் காணப்படுவதாகவும்
சமூக வலைத்தளத்தில்
இராஜாங்க அமைச்சர்
ரஞ்சன் ராமநாயக்க
தெரிவிருந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இது
தொடர்பில் நேற்றையதினம்
(14) பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடொன்றைப்
பதிவு செய்துவிட்டு,
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே
தேரர் இந்த
கால அவகாசத்தை
வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.