தன்னுடன் சிறையிலிருந்த அரசியல் கைதிக்கு
வீடு நிர்மாணித்துக் கொடுத்த
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ
தன்னுடன் சிறையிலிருந்த அரசியல் கைதியொருவருக்கு வீடொன்றை நிர்மாணித்துக் கொடுத்துள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ.
தான் சிறையில் இருந்த காலத்தில் தன்னுடன் சிறையில் இருந்த கிளிநொச்சி கணகாம்பிகைகுளத்தைச் சேர்ந்த அரசியல் கைதியான சமரிமுத்து லோகநாதனின் குடும்பத்திற்கு வீடு ஒன்றினை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ நிர்மாணித்துக் கொடுத்துள்ளார்.
குறித்த நிகழ்வு இன்று (30) காலை 10.30மணியளவில் இடம்பெற்றது. அரசியல் கைதியான சபரிமுத்து லோகநாதனின் குடும்ப நிலையை சிறைச்சாலைக்குள் வைத்து அறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, அவரின் குடும்பத்திற்காக புதிய வீடு ஒன்றை நிர்மாணித்து இன்று (30) கையளித்தார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.