ஹேமகுமார , கருணா,  முபாறக் அப்துல் மஜீத்
மஹிந்தவுடன் கைகோர்ப்பு


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் புதிய அரசியல் கட்சிகள் இணைந்து அமைக்கும் கூட்டணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (26) கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவின் இல்லத்தில் இடம்பெற்றது.
முன்னாள் தென் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார, கருணா அம்மான் எனக்கூறப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், முன்னாள் எம்.பி. சதாசிவம் ஆகியோர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

இதன்படி,
 மவ்பிம ஜனதா கட்சி (ஹேமகுமார நாணயக்கார)
இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, (சதாசிவம்)
தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணி, (கருணா அம்மான் எனக்கூறப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்)
ஈழவர் ஜனநாயக முன்னணி (எஸ்.ஜே.துஸ்யந்தன்)
முஸ்லிம் உலமா கட்சி(முபாறக் அப்துல் மஜீத்)
 லிபரல் கட்சி (கமல் நிஷ்சங்க)
நவ சிகல உறுமய (சரத் மன்மேந்திர)
ஜனநாயக தேசிய கட்சி (அருண சொய்சா)
ஐக்கிய இலங்கை மகா சபை (ஜயந்த குலதுங்க)
புமிபுத்ர கட்சி (சரத் விஜேரத்ன)
 உட்பட அரசியல் கட்சிகள் பல ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.










0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top