கல்முனையில் இடம்பெற்ற விபத்தில்
முச்சக்கரவண்டி சாரதி ஸ்தலத்தில் பலி!
கல்முனை - பெரிய நீலாவணையில் நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்தில் ஸ்தலத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.
பெரிய நீலாவணை விஷ்ணு மகாவித்தியாலயத்திற்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றது. லொறியொன்றும், முச்சக்கர வண்டியொன்றும் மோதியதில் விபத்து இடம்பெற்றது.
உயிரிழந்தவர் பெரிய நீலாவணை பிரதேசத்தை சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி நடேசன் சுபராஜ் வயது 37 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபரின் சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.