வைத்தியர் ஷாபி சற்று முன்னர்
பிணையில்விடுதலை!
பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ஷாபி இன்று குருணாகல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். இதன்போது ஷாபிக்கு பிணை வழங்குமாறு அவரது சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.
வழக்கினை தீவிர விசாரித்த நீதிபதி வைத்தியர் ஷாபியை பிணை விடுதலை செய்தார்.
250000 ரூபா ரொக்க பிணையிலும் 2.5 மில்லியன் ரூபா நான்கு சரீர பிணையிலும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக பல பெண்களுக்கு சிசேரியன் செய்தார், மோசடியான முறையில் பல சொத்துக்களை சேர்த்தார் என பல குற்றச்சாட்டுக்கள் வைத்தியர் ஷாபி மீது வைக்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து கைது செய்யப்பட்ட இரண்டு மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த வைத்தியர் ஷாபி இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.