பாகிஸ்தானில் விமான விபத்து
18 பேர் பரிதாபகமாக உயிரிழப்பு
பாகிஸ்தானில் இராணுவத்தினருக்கு சொந்தமான சிறிய ரக விமானமொன்று விபத்திற்குள்ளானதில், 18 பேர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தான், ராவல்பிண்டிக்கு அருகில் மக்கள் குடியிருப்பு பகுதியிலேயே குறித்த விமானம் இன்று அதிகாலை விபத்திற்குள்ளானதாக, வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்விமானம் விபத்திற்குள்ளாக முன்னதாக வெடித்துள்ளதாக, சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் 05 விமானப் பணியாளர்கள் மற்றும் 13 பொதுமக்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தனது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.