லண்டனில் வணிக நிலையங்கள்
தீப்பிடித்து
எரிந்தன!
(படங்கள்)
லண்டனின் ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் வோல்த்தம்ஸ்ரோ வணிக
அங்காடியில் இன்று காலை ஏற்பட்ட பெரும் தீயை அணைப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட
தீயணைப்புபடையினர் 25 தீயணைப்பு இயந்திரங்கள் சகிதம் தொடர்ந்தும்
போராடி தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
செல்போர்ண் வீதியில் அமைந்துள்ள குறித்த வணிக அங்காடியில்
இன்று காலை 7.40 அளவில் ஏற்பட்ட தீ விரைவாக பரவியதால் பெரும்
விபத்தாக மாறியது.
இதனை அடுத்து 25 தீயணைப்பு
இயந்திரங்களுடன் அங்கு விரைந்து சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புப்படையினர்
கடுமையாக போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். எனினும் இதுவரை அந்த
இடத்துக்கு அருகில் செல்ல மக்கள் அனுமதிக்கப்படவில்லை. குறித்த அங்காடியில் 66 வணிக நிலையங்கள் அமைந்திருந்த நிலையில் அவற்றில் பல
தீயினால் அழிவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தீவிபத்தினால் இன்று காலை
அந்தப்பகுதியில் இருந்த தமிழ்மக்களும் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.