கொலன்னாவ நகரசபைக்குட்பட்ட
சில பகுதிகளுக்கு நீர் வெட்டு
கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று 14 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 10 மணி வரை இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.
கொலன்னாவ நீர் குழாயில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கொலன்னாவ நகரசபைக்குட்பட்ட ராஜகிரிய, மொரகஸ்முல்ல, அத்துல்கோட்டே, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல, கொஸ்வத்த மற்றும் ராஜகிரியவில் இருந்து நாவல திறந்த பல்கலைகழகம் வரையான பிரதான பாதை உட்பட அதனுடன் தொடர்புடைய குறுக்கு வீதிகளுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.