இரு அமைச்சர்களின்
அமைச்சு பொறுப்புகளில் மாற்றம்!
அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, அமைச்சர் பீ. ஹரிசன் ஆகியோரின் அமைச்சு பொறுப்புகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார வகித்த பொதுநிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சுப் பதவியில் கிராமிய பொருளாதார அலுவல்கள் நீக்கப்பட்டு கால் நடை வள அபிவிருத்தி பதவி இணைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அவருக்கு பொதுநிர்வாகம், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் கால்நடை வளங்கள் அபிவிருத்தி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அமைச்சர் பீ. ஹரிசன் வகித்த விவசாய, கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சுப் பதவியில் கால் நடை வள அபிவிருத்தி நீக்கப்பட்டு கிராமிய பொருளாதார அலுவல்கள் இணைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய விவசாய, கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசன மற்றும் மீன்பிடி நீரியல் வளம் என அவரது அமைச்சு பதவி திருத்தப்பட்டுள்ளது.
இவ்விரு அமைச்சர்களினதும் அமைச்சு பொறுப்புகள் கடந்த மே 29 ஆம் திகதி மாற்றப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்விரு அமைச்சர்களுக்கும் புதிய நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்னவும் கலந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.