சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம்
41 வது தடவையாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்
ஹக்கீமுடன் இன்று கலந்துரையாடல்

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வழங்குவது தொடர்பான பரஸ்பர கலந்துரையாடல் இன்று (24) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் கொழும்பு இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை மாநகர சபையின் சுயேட்சைக்குழு உறுப்பினர்கள், சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனீபா, சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளர் .எல்.எம். சலீம் மற்றும் உயர்பீட உறுப்பினர் ஏ.சி. யஹ்யாகான், கட்சியின் சாய்ந்தமருது முக்கியஸ்தர்களான அப்துல் பஷீர், ஏ.எல்.எம். றஷீட் ( புர்கான் ), அலியார் நஸார்தீன், ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்துக்கு விரைவில் தீர்வுகாண்பதுடன், யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் ஏககாலத்தில் சபைகள் பிரிக்கப்பட்டு சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் வழங்குவற்கு  இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.









0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top