2 மோட்டார் சைக்கிள்கள்
டிப்பர் வாகனத்துடன் மோதி ஒருவர் பலி
உரும்பிராய் - கோப்பாய் வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள், டிப்பர் வாகனம் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இன்று (08) காலை உரும்பிராய் கிருஷ்ணன் கோவிலடியில் இடம்பெற்றது.
மோட்டார் சைக்கிள் ஒன்று சடுதியாக வீதியைக் கடந்த நிலையில், பிரதான வீதியில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி நிலைகுலைந்து டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு விபத்து இடம்பெற்றது என்று பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை அடுத்து மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment