கோத்தாவை வேட்பாளராக
 அறிவிக்கிறார் ஹிந்த
ஒரு வாரம் ஆலயங்களில் வழிபாடு



எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோத்தபய ராஜபக்வை, எதிர்வரும் 11ஆம் திகதி, எதிர்க்கட்சித் தலைவர் ஹிந்த ராஜபக் அறிவிக்கவுள்ளார் என, ராஜபக்வினருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கோத்தாபய ராஜபக்வை நிறுத்துவதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது.

கொழும்பில்  எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை ஹிந்த ராஜபக் வெளியிடவுள்ளார்.

அந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர், ஒரு வார காலத்துக்கு கோத்தாபய ராஜபக் நாடு முழுவதிலும் உள்ள மத வழிபாட்டு இடங்களுக்குச் செல்லவுள்ளார்.

அதேவேளை, கோத்தாபய ராஜபக்வுக்கு நெருக்கமான உதவியாளர்கள், அவரது ஜனாதிபதித் தேர்தலுக்கான கொள்கை அறிக்கையை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top