38 வருடங்களுக்குப் பின்னர் 
இரண்டாவது தடவையாக
இன்று உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய
இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க.


  உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகி வருவதாக ஊடகங்களில் தெரிவித்து இருந்த  பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர், ரஞ்சன் ராமநாயக்க, இன்று உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.

இன்று ஆரம்பமான பரீட்சைக்கு, கோட்டே ஆனந்த பாலிகா வித்தியாலயத்திற்கு தனிப்பட்ட விண்ணப்பதாரியாக தோற்றிய அவர், கிறிஸ்தவ பாட பரீட்சைக்கு தோற்றுவதற்காக அங்கு சமூகமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய பாடங்களாக அரசியல் மற்றும் ஊடக பாட பரீட்சைகளுக்கும் அவர் தோற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1981 இல் முதன் முறை .பொ.. உயர் தர பரீட்சைக்கு தோற்றிய அவர், 38 வருடங்களின் பின்னர் மீண்டும் உயர் தர பரீட்சைக்கு தோற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக அவர் தனிப்பட்ட ஆசிரியரிடம் பயின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.


அவர் உயர் தர பரீட்சையின் முதலாவது அமர்வில் ஒரேயொரு பாடத்தில் மாத்திரம் சித்தியடைந்ததாக தெரிவித்திருந்ததோடு, இம்முறை பரீட்சையில் சித்தியடைந்தால் தான் ஒரு சட்டத்தரணியாக வர விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.


State Min. Ranjan sits for A/L exam after 38 years

State Minister Ranjan Ramanayake, who first sat for his G C E Advanced Level examinations in 1981, attempted the exam for the second time, after 38 years today (Aug 5).

International media reported that the state minister had hired private tutors for his study sessions at home as he prepared himself to face the exams.

He had stated that he had been able to only pass a single subject at the A/L exams during his first attempt.

State Minister Ramanayake had said that he hopes to enter Law College after passing his A/L exams to fulfill his ambition of becoming a lawyer.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top