சஜித் – மைத்திரி புதுக்கூட்டணி?
எந்த உண்மையும் இல்லை
மறுக்கிறது சுதந்திரக் கட்சி
ஐதேக
பிரதித் தலைவர்
சஜித் பிரேமதாசவுடன்
இணைந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய கூட்டணியை உருவாக்கத்
திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளில்
எந்த உண்மையும்
இல்லை என,
சிறிலங்கா சுதந்திரக்
கட்சியின் பொதுச்செயலர்
தயாசிறி ஜயசேகர
தெரிவித்துள்ளார்.
”சஜித்
பிரேமதாசவை நாட்டின் ஜனாதியாக்க வேண்டிய அவசியம்
சிறிலங்கா சுதந்திர
கட்சிக்கு கிடையாது
.
கடந்த
ஆண்டு ஒக்ரோபர்
மாதம் ஏற்பட்ட
அரசியல் மாற்றத்தின்
போது சஜித்
பிரேமதாசவை பிரதமராகப் பதவியேற்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டிருந்தார்.
இதனை
அடிப்படையாகக் கொண்டே இவ்வாறான உண்மைக்கு புறம்பான
செய்திகள் பரப்பப்படுகின்றன.
ஐதேகவுடனோ
அல்லது சஜித்
பிரேமதாசவுடனோ இனி ஒருபோதும் சுதந்திர கட்சி
இணையாது. இந்த
நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கிறோம்.
பொதுஜன
பெரமுனவுடன் கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்பில்லை.
எனவே, தனித்து பயணிப்பது தொடர்பாக கட்சியின்
மத்திய குழு
கூட்டத்தில் ஆராயப்படும்.” என்றும் அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment