இந்தியாவின்
முன்னாள் மத்திய அமைச்சர்
சுஷ்மா
சுவராஜ் காலமானார்
இந்தியாவின் முன்னாள் மத்திய
வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பால் காலமானார்.
பா.ஜ.,வின், மூத்த
தலைவர்களில் ஒருவர், சுஷ்மா சுவராஜ்,
67 , கடந்த 2014 இந்தியலோக்சபா தேர்தலில், மத்திய பிரதேச மாநிலம், விதிஷா தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். மோடி அமைச்சரவையில் வெளியுறவு
அமைச்சராக திறம்பட பணியாற்றினார். சர்க்கரை நோயாளியான சுஷ்மாவுக்கு, 2016ல், சிறுநீரகங்கள் செயல் இழந்தன. டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவமனையில், அவருக்கு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
செய்யப்பட்டது.இதையடுத்து நடந்து முடிந்த 2019 லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் தீவிர
அரசியலில் இருந்து விலகினார்.
இந்நிலையில், சுஷ்மாவுக்கு நேற்று (ஆக.,06) திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர்
டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர
சிகிச்சை அளித்தனர்.
கவலைக்கிடமாக அவர் இருந்ததாக தகவல்கள் வெளிவந்த நிலையில்,
சிகிச்சை பலனின்றி அவர்
உயிர் பிரிந்தது.
சுஷ்மா சுவராஜ், வெளியுறவுத்துறை மந்திரியாகவும் பாரதீய ஜனதா கட்சியின்
முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர். இந்தியாவின் பதினைந்தாவது மக்களவையின் எதிர்கட்சித் தலைவராக
இருந்துள்ளார். இவர் டெல்லியின் முன்னாள் முதல்-மந்திரியாக பதவி வகித்துள்ளார்.
சுஷ்மா சுவராஜ் இந்திய வெளியுறவுத் துறை மந்திரியாக 26 மே 2014 முதல் 29 மே 2019 வரை பதவியில் இருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினராக ஏழு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று முறை சட்டசபை
உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லியின் ஐந்தாவது முதலமைச்சராக 1998-ம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் திகதி பதவி ஏற்றார். மேலும் அவர் டெல்லியின் முதல் பெண்
முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் பல சமூகங்களிலும் கலாச்சாரங்களிலும்
தொடர்புடையவர்.
இந்திரா காந்திக்குப் பிறகு வெளிவிவகார மந்திரி பதவி வகித்த
இரண்டாவது பெண் சுஷ்மா சுவராஜ் ஆவார். 2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரையிலான இந்திய-இஸ்ரேல் நாடாளுமன்ற
நட்புக் குழுவின் தலைவராக செயல்பட்டார்.
சுஷ்மா சுவராஜ் அம்பாலாவில் உள்ள எஸ்.டி கல்லூரியின்
என்.சி.சி சிறந்த கேடட் விருது பெற்றார்.
# 1973 ல் இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில்
வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார்.
# மே 2008 - 2009: மாநிலங்களவை ஹவுஸ் கமிட்டி உறுப்பினர்.
# 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் திகதி சுஷ்மா சுவராஜ் மக்களவையில் பாரதீய
ஜனதா கட்சி நாடாளுமன்றக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
27 மே 2014 முதல் 16 பிப்ரவரி 2016 வரை மத்திய அமைச்சரவையில் வெளியுறவு மற்றும்
வெளிநாட்டு இந்திய விவகாரங்களுக்கான துறையில் அமைச்சராக பணியாற்றினார்.
வெளிநாடுகளில் சிக்கலில் சிக்கிய இந்தியர்களுக்கு தேவையான
உதவியை சுஷ்மா சுவராஜ் செய்து வந்தார். சமூக வலைதளங்களில், இந்தியர்கள் எழுப்பிய கேள்விக்கு உடனுக்குடன்
பதிலளித்து வந்தார். இதனால், பலரும் அவரை பாராட்டி வந்தனர்.
0 comments:
Post a Comment