என்னதான் நடக்கிறது
ஒன்றுமே புரியலை
இது கல்முனை
மக்களின் அங்கலாய்ப்பு
கல்முனை
பிரதேச செயலகம்
தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க
வேண்டுமானால் முஸ்லிம் தரப்பினர் தமிழ் தரப்பு அரசியல்வாதிகளையும்
அவர்கள் தரப்பு
மக்களையும் சந்திக்க வேண்டும் என்பதாகவே இருக்கவேண்டும்.
ஆனால், இதுவரைக்கும்
கல்முனை முக்கியஸ்த்தர்களை
கூட்டிச்சென்று சுமந்திரனையோ, சம்மந்தனையோ சந்திக்கவில்லை. அதுபோன்று தமிழ் தரப்புக்களையும் முஸ்லிம்
அமைச்சர்களைச் சந்திக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவுமில்லை.
கல்முனையைப் பாதுகாப்பதற்கு சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை மக்கள்
கல்முனை முஸ்லிம் மக்களோடு உறுதுணையாக இருந்து ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்று
வேண்டப்படுகின்றது. ஆனால், இது சம்மந்தமான கூட்டங்களில் சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை ஊர்களைச் சேர்ந்த எவரும்
அழைக்கப்படுவதில்லை. பங்குபற்றியதாகவுமில்லை
ஒரு பக்கம் சாய்ந்தமருது மக்களை கூட்டிச்சென்று அமைச்சர் ஹக்கீமையும், அமைச்சர் ரிசாட்டையும், பௌசியையும் சந்திக்கச் செய்வது, மறுபக்கம் சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை
ஊர்களைச் சேர்ந்த எவரையும் அழைக்காது கல்முனை மக்களை கூட்டிச்சென்று தமிழ் பிரமுகர்களைச்
சந்திக்காது கல்முனை உப பிரதேச செயலக விடயமாக எம்மவரிடமே பேசுவது?
இவைகளைப் பார்க்கும்போது என்னதான் நடக்கிறது ஒன்றுமே புரியலை இது கல்முனை
மக்களின் அங்கலாய்ப்பு
இதேவேளை, கல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், கல்முனை ஜும்ஆ பள்ளிவாசல்,வர்த்தக சங்கம் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்தித்து பேசினர்.
நேற்று இரவு (05) கொழும்பில் நடந்த இந்த சந்திப்பில் கல்முனை ஜும்ஆ பள்ளி தலைவர் டாக்டர் அஸீஸ் , வர்த்தக சங்க தலைவர் சித்தீக் ஹாஜியார்,ஆகியோர் உட்பட கல்முனை முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூபும் பங்கேற்றார்.
கல்முனை விவகாரத்தில் சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமெனவும் அதற்காக முழுமூச்சுடனும் செயற்படுமாறும் இவர்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த விவகாரத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டு பிரச்சினைக்கு சுமூக தீர்வுகாண, காட்டி வருகின்ற அக்கறை குறித்து கல்முனை மக்கள் சார்பில் தமது நன்றிகளையும் தெரிவித்தனர்.
எதிர்காலத்திலும் தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்குமாறு அவர்கள் கோரிக்கைவிடுத்தனர். இந்த விடயங்களை கேட்டறிந்த அமைச்சர் , கல்முனையில் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கும் கல்முனை விவகாரத்தில் சுமூகமான தீர்வினை எட்டுவதற்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடந்த காலத்தில் காட்டிய ஈடுபாடு போன்று தொடர்ந்தும் தமது இதய சுத்தியான பங்களிப்பை நல்குமெனவும் உறுதியளித்தார்.
0 comments:
Post a Comment