கல்முனை தெற்கு பிரதேசத்திலுள்ள
மக்களுக்கு கணனியுடனான
சகல வசதிகளும் உள்ள தபாலகம்
அருகில் இல்லாததால் இன்னல்களை
எதிர்நோக்குவதாகப் புகார்
கல்முனை தெற்கு பிரதேசத்திலுள்ள மக்களுக்கு
கணனியுடனான சகல வசதிகளும் உள்ள தபாலகம் அருகில் இல்லாததால் பல இன்னல்களை
எதிர்நோக்குவதாக புகார் தெரிவிக்கப்படுகின்றது.
கல்முனை தெற்குப் பிரதேசத்தில் (கல்முனைக்குடி) அதிக
எண்ணிக்கையான மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தபாலகம் சென்று
கணனியூடாக தமது தேவைகளை செய்து முடிக்க தூரத்திலுள்ள கல்முனை நகரத்திற்குச் செல்ல
வேண்டும். அல்லது சாய்ந்தமருதுக்குச் செல்ல வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் சிறு கிராமங்களில் கிட்டிய
தூரங்களில் கூட தபால் அலுவலகங்கள் இருக்கின்ற நிலையில் கல்முனை தெற்கு பிரதேசத்திலுள்ள மக்களுக்கு
கணனியுடனான சகல வசதிகளும் உள்ள தபாலகம் அருகில்
இல்லாதது பெரும் குறைபாடு எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இது விடயத்தில் இப்பிரதேச மக்கள் பிரதிநிதி விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
0 comments:
Post a Comment