கொழும்பிலிருந்து
நுவரெலியா நோக்கி சென்ற
டிப்பர் ரக வாகனம் பள்ளத்தில்
பாய்ந்து விபத்துக்குள்ளானது
கொழும்பிலிருந்து
நுவரெலியா நோக்கி சென்ற டிப்பர் ரக வாகனம் ஒன்று வட்டவளை குயில்வத்தை பகுதியில் வீதியை
விட்டு விலகி 15 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று காலை 5.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து நேரிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இவ்வாகனத்தின் சாரதியும், உதவியாளரும் நுவரெலியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.