நாளை ராஞ்சியில்
இலங்கை-இந்தியா
5-வது ஒருநாள் போட்டி
ராஞ்சியில்
2014.11.16 ஆம் திகதி நாளை (ஞாயிறு)
இலங்கைக்கு எதிரான 5-வது, இறுதி ஒருநாள்
போட்டி நடைபெறுகின்றது.
இப்போட்டியில்
ரெய்னாவுக்கு
ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
5-0 என்ற வெற்றி
முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.
எதிர்வரும்
நாட்களில் இந்திய
அணி நிறைய
கடினமான கிரிக்கெட்
ஆட்டங்களில் விளையாடவிருப்பதை அடுத்து சுரேஷ் ரெய்னாவுக்கு
ஓய்வு அளிக்க
முடிவெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரெய்னாவுக்க்கு
பதிலாக வளரும்
அதிரடி வீரர்
கேதர் ஜாதவ்
நாளை அணியில்
இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4 போட்டிகளில்
வென்று விட்டோம்
என்று அலட்சியம்
கூடாது என்றும்
5-0 என்ற வெல்ல
போராட வேண்டும்
என்று கேப்டன்
விராட் கோலி
அணியினரிடத்தில் அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கை
அணி பீல்டிங்கிலும்
சோடை போய்
வருகிறது 4-வது போட்டியில் ரோஹித் சர்மாவுக்கு
4 ஓட்டங்களில் திசரா பெரேரா கோட்டை விட்ட
கேட்ச் மற்றும்
பிற கேட்ச்கள்
தவறவிடப்பட்டதால் அவர் உலக சாதனை செய்ய
முடிந்தது.
இவர்
மட்டுமல்ல இந்தத்
தொடரில் சதம்
அடித்த இந்திய
துடுப்பாட்டக்காரர்களுக்கு இலங்கை தொடக்கத்தில்
கேட்ச் விட்டனர்
என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.