நான்கு கை மற்றும் கால்களுடன்
பிறந்த குழந்தை
அதிசயமாகப் பார்க்கும் மக்கள்
இந்தியாவின்
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள
ஒரு கிராமத்தில்
நான்கு கைகள்
மற்றும் நான்கு
கால்களுடன் பிறந்த குழந்தையை அங்குள்ள மக்கள்
அதிசயமாகப் பார்த்து செல்கின்றனர் என அறிவிக்கப்படுகின்றது.
மேற்குவங்க
மாநிலம் பிர்பும்
மாவட்டத்தில் உள்ள பருய்பூர் என்ற கிராமத்தில்
நான்கு கைகள்
மற்றும் நான்கு
கால்களுடன் இந்த அதிசய குழந்தை பிறந்துள்ளது. இந்த
செய்தியை கேள்விப்பட்டு
அங்குள்ள அக்கம்பக்கத்து கிராமத்தினர் ஏராளமானோர்
பருய்பூர் கிராமத்திற்கு
வந்து செல்கின்றனர்
எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நான்கு
கைகள் மற்றும்
கால்களுடன் பிறந்துள்ள இந்தகுழந்தையை கடவுளின்
அவதாரம் என்று நம்பும் அந்த பகுதி
மக்களில் சிலர், மருந்துவமனைக்கு வந்து குழந்தையை
நேரடியாக கண்டு
ஆச்சரியப்பட்டு செல்கின்றனர் எனவும் கூறப்படுகின்றது. அதிக எண்ணிக்கையில் மக்கள் அந்த இடத்திற்கு
வந்து செல்வதால் கூட்டத்தை கட்டுப்படுத்துவது
கடினமாக இருப்பதாக
உள்ளூர் பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில்
இது குறித்து
மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கும்போது. பிறப்பு
குறைபாடு காரணமாக
குழந்தை இவ்வாறு
பிறந்துள்ளதாக கூறி இருக்கின்றனர். எனினும்
இதனை ஏற்காத
மக்கள் அந்த
குழந்தையை கடவுளின்
குழந்தை என்றே
நம்புகின்றனராம்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.