தி.மு.க.வில் முக்கிய
பேச்சாளராக விளங்கிய
நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில்
தி.மு.க.வில் முக்கிய
பேச்சாளராக விளங்கிய நடிகை குஷ்பு கடந்த
ஜூன் மாதம்
தி.மு.க.வின் அடுத்த தலைவர்
யார்? என்பது
பற்றிய சர்ச்சையான
கருத்தை வெளியிட்டதால்
ஏற்பட்ட எதிர்ப்பை
அடுத்து திமுகவில்
இருந்து விலகினார்.
இந் நிலையில்
கடந்த சில
தினங்களாக அவர்
பாஜகவில் இணைய
உள்ளதாக செய்திகள்
வெளிவந்தன. இதனை மறுத்த குஷ்பு பாஜகவில்
நான் இணைவதாக
சொல்லப்படுவதில் எந்த அடிப்படை உண்மையும் இல்லை
என்று ட்டுவிட்டரில
நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்
அவர் இன்று மாலை காங்கிரஸ்
தலைவர் சோனியா
காந்தியை சந்தித்து
பேசி தன்னை
காங்கிரஸில் இணைத்துக்கொண்டார்.
அதன்பின் புதுடில்லியில்
இன்று செய்தியாளர்களிடம்
பேசிய குஷ்பு,
காங்கிரஸ் இணைவதாக
முறைப்படி அறிவித்துள்ளார்.
காங்கிரஸில் இணைந்தது மன நிறைவாக உள்ளது
என்றும் கூறியுள்ளார்.
அவர் திமுகவை
விட்டு வெளியேறியதற்குக்
காரணம் கேட்டபோது
அதற்கு பதில்
அளிக்க மறுத்துவிட்டார்
எனத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த
சில காலமாகவே
திமுகவில் இருந்து
வெளியேற வேண்டும்
என்று எண்ணியதாகவும்
அதற்கு முன்பு
நடந்த சம்பவங்களே
காரணம் என்பதை
மறைமுகமாகக் கூறியதுடன் அதுப்பற்றி பேச முடியாது
என்றும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.