விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி அளித்து வளர்த்தது நோர்வே
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிப்பு
”இலங்கையில்
30 ஆண்டு கால உள்நாட்டுப் போரின்போது, விடுதலைப் புலிகளுக்கு அப்போதைய நோர்வே அரசு
நிதியுதவி அளித்து வந்தது. இதுதொடர்பாக, நோர்வே அரசு விசாரணை நடத்த வேண்டும்' என்று
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்று
சனிக்கிழமை குருநாகலில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி உரை நிகழ்த்தும் போதே
இத்தகவலை தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது:
விடுதலைப்
புலிகளுக்கு நோர்வே அரசு நிதியுதவி அளித்ததற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. இதுதொடர்பாக,
அந்நாட்டு அரசு விசாரணை நடத்த வேண்டும்.
போரின்போது,
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சோல்ஹெய்ம்,
தற்போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் எங்களுக்கு எதிராக ஆதாரங்களைக் கொடுப்பதற்குத்
திட்டமிட்டு வருகிறார்.
விடுதலைப்
புலிகளுக்கு எதிராகப் போரிட நாங்கள் தயாராகிக் கொண்டிருந்த வேளையில், "அவர்களை
தோற்கடிக்க முடியாது' என்று கூறி எங்களது தைரியத்தைக் குறைத்தவர் எரிக் சோல்ஹெய்ம்
என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.