மூன்றாவது தடவையாகவும்
போட்டியிடுவதற்கு ஜனாதிபதி
ராஜபக்ஸவுக்கு, சட்டத்தில் தடையில்லை என
உயர்நீதிமன்றத்தின்
அபிப்பிரயாயம் தொடர்பில் தங்களுடைய
கட்சியும் இந்நாட்டு மக்களும் சரியான தெளிவை
பெறவேண்டும்
உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள அபிப்பிரயாயத்தின்
பிரதியை
ஐ.தே.க கோரியுள்ளது.
உயர்நீதிமன்றத்தின்
அபிப்பிரயாயம் தொடர்பில் தங்களுடைய கட்சியும் இந்நாட்டு மக்களும் சரியான தெளிவை பெறவேண்டும்
ஜனாதிபதி
தேர்தலில் மூன்றாவது
தடவையாகவும் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு,
சட்டத்தில் தடையில்லை என்று உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள அபிப்பிரயாயத்தின்
பிரதியை தங்களுக்கு
வழங்குமாறு பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய
தேசியக் கட்சி
கோரியுள்ளது.
எதிர்க்கட்சிகளின்
பிரதம கொறடாவும்
நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன் அமரதுங்க நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை
இந்த கோரிக்கையை
முன்வைத்தார்.
உயர்நீதிமன்றத்தின்
அபிப்பிரயாயம் தொடர்பில் தங்களுடைய கட்சியும் இந்நாட்டு
மக்களும் சரியான
தெளிவை பெறவேண்டும்
என்றும் அவர்
இதன்போது கூறியிருக்கிறார்.
உயர்நீதிமன்றத்தின்
அபிப்பிரயாயம் அல்லது தீர்ப்பு எவ்வாறானதாக இருந்தாலும்
பரவாயில்லை. அதனை சபை முதல்வாரன அமைச்சர்
நிமல் சிறிபால
டி சில்வாவுக்கு
நாடாளுமன்றத்தில் கூறுவதற்கு அதிகாரம் இல்லை என்றும்
அவர் அப்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது
குறுக்கிட்ட ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்
ஏ.எச்.எம்அஸ்வர், உயர்நீதிமன்றத்தினால்
வழங்கப்பட்ட தீர்ப்பை சபை முதல்வரான அமைச்சர்
நிமல் சிறிபால
டி சில்வா,
நாடாளுமன்றத்துக்கு அறிவித்தார்.
அந்த
அறிவிப்பை நாடாளுமன்றத்தின்
உத்தியோகபூர்வ அறிக்கையான ஹன்சாட்டிலிருந்து
யார் வேண்டுமானாலும்
பெற்றுக்கொள்ள முடியும் என்று கூறினார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.