அதிகாரமுள்ள அரசியல்வாதிகளே!
மக்களுக்கு ஏன் இந்த அவல நிலை!!
காரைதீவு – மாவடிப்பள்ளி
பிரதான வீதியிலுள்ள பாலங்களில் ஒன்று உயர்த்தப்படுவதுடன் மற்றது அகலமாக்கப்படல் வேண்டும்
அம்பாறை மாவட்ட அதிகாரமுள்ள அரசியல்வாதிகளே நடவடிக்கை எடுங்கள்.
மழை
பெய்யும் காலங்களில்
முற்றாக நீரில்
மூழ்கி பயணம்
செய்யமுடியாது போகும் காரைதீவு – மாவடிப்பள்ளி பிரதான
வீதியிலுள்ள பெரிய பாலம் மற்றும் சிறிய
பாலம் இரண்டையும் உயர்த்தி
இப் பாலங்களுக்கூடாக
ஒரே நேரத்தில்
இரு வாகனங்கள்
சிரமமின்றி பயணிக்கக் கூடியவாறு அகலமாக்குவதற்கு அம்பாறை
மாவட்ட அரசியல்வாதிகள்
ஒன்றுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என
இப் பிரதேச மக்கள்
கோரிக்கை விடுக்கின்றனர்.
இப் பாலங்களில் ஒன்று மிகவும்
குறுகியதாகவும் ஒரே நேரத்தில் இரு வாகனங்கள்
பயணிக்க முடியாமலும்
உள்ளது. மற்றைய
ஒன்று
மழை பெய்யும் காலங்களில் வெள்ள நீரில்
அப்படியே மூழ்கிவிடுகின்றது.
இதனால் இப்
பாதையில் போக்கு
வரத்துச் செய்ய
முடியாத நிலை
ஏற்படுகின்றது.
அம்பாறை
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் குறிப்பாக விவசாயிகள்
அரசாங்க தனியார்
அலுவலக உத்தியோகத்தர்கள்
இப்பாதயினூடாக போக்கு வரத்துச் செய்வதற்கு பல
சிரமங்களை அனுபவிப்பதுடன்
உயிர் ஆபத்துக்களையும்
எதிர் நோக்குகின்றனர்
என அறிவிக்கப்படுகின்றது. இச் சிறிய பாலத்தை
உயர்த்துவதுடன் மாவடிப்பள்ளி எல்லையிலிருந்து காரைதீவு
சந்தி வரையும்
வீதியும் அகலப்படுத்தப்பட்டு
உயர்த்தப்படல் வேண்டும் என்ற வேண்டுகோளும் இப்பிரதேச
மக்களால் காலத்திற்கு
காலம்
விடுக்கப்பட்டுவருகின்றது.
கல்முனையிலிருந்து
அம்பாறைக்கும் அம்பாறையிலிருந்து கல்முனை,
காத்தான்குடி, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை பிரதேசங்களுக்கும்
நாளாந்தம் பல
நூற்றுக் கணக்கான
பஸ்கள் லாரிகள்
உட்பட ஆயிரக்கணக்கான
வாகனங்கள் இப்பாலங்களினூடாகவே
பயணிக்க வேண்டியிருக்கிறது
எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில்
எத்தனையோ பாரிய
அபிவிருத்தி நடவடிக்கைகள் தற்போது துரிதமாக நடைபெற்றுக்
கொண்டிருக்கும் நிலையில் மனித உயிர்களுக்கு
ஆபத்தை உண்டுபண்ணும்
இப் பாலங்கள்
அகலப்படுத்தப்பட்டு உயர்த்தப்பட வேண்டியது
அவசியமல்லவா? அம்பாறை
மாவட்ட அரசியல்வாதிகளே
இக் குறைபாட்டை
நிவர்த்திப்பதற்கு ஒன்று பட்டு செயல்படமாட்டீர்களா?
என இப்
பிரதேச மக்கள்
அதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகளை நோக்கி கேள்வி எழுப்புகின்றனர்.
குறிப்பு:
அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நிலங்கள் உட்பட. காரைதீவு – மாவடிப்பள்ளி பாலமும் தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.