கட்டுப்படுத்தாவிடின்
சமூக ஊடகங்களை
முற்றாகத் தடை செய்வேன்
–ஜனாதிபதி எச்சரிக்கை
சமூக
ஊடகங்களை கட்டுப்படுத்தாவிடின்
அவற்றை முற்றாகத்
தடை செய்வேன்
என்று ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார்.
கொழும்பில்
இன்று ஊடகவியலாளர்களைச்
சந்தித்த போதே
அவர் இவ்வாறு
கூறியுள்ளார்.
சமூக
ஊடகங்கள் மீதான
தடையை இன்று
நீக்குவதற்குத் திட்டமிட்டோம். ஆனால், நேற்றும் பெருமளவு
தவறான தகவல்கள்
பரப்பப்பட்டன. எனவே, அதனை மீள்பரிசீலனை செய்கிறோம்.
சமூக
ஊடகங்களின் தலைவர்களை நான் இன்று சந்திக்கவுள்ளேன்,
இதனைக் கட்டுப்படுத்தாவிடின்
சமூக ஊடகங்களை
முற்றாகவே தடை
செய்வேன்” என்றும்
ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.