ஜனாதிபதி மைத்திரி பயணித்த
ஹொலிகொப்டரால்
இரண்டு கடைகள் முழுமையாக சேதம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலிகொப்டரால் இரண்டு கடைகள் முழுமையாக சேதமடைந்துள்ளது.

நாவுல இராணுவத்தின் விசேட படை தலைமையகத்தில் இன்று ஜனாதிபதி தலைமையில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி சென்ற ஹெலிகொப்டர், மேல் நோக்கி பறக்கும் போது அருகில் இருந்த இரண்டுகள் கடைகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

ஹெலிகொப்ரில் இருந்து ஏற்பட்ட காற்று காரணமாக இந்த சேதம் ஏற்பட்டதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஒரு வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் கையில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. இந்த அனர்த்தம் காரணமாக அந்தப் பகுதி மக்கள் பெரும் கவலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top