இஸ்ரேல் தீ விபத்து..!
சந்தேகத்தின் பேரில் 12 பேர் கைது (photos)
Israel wildfires: 12
arrested on suspicion of arson (photos)
இஸ்ரேலை
உலுக்கி வரும் பாரிய தீயை
கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடிவருகின்றனர்.
இந்நிலையில்
வேண்டுமென்றே தீ வைத்ததாக கூறி
சந்தேகத்தின் பேரில் 12 பேரை அந்நாட்டு பொலிஸார்
கைது செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி
வெளியிட்டுள்ளன.
இதேவேளை
குறித்த தீ விபத்துக்கு பாலஸ்தீனிய
ஆர்வலர்கள் காரணமாக இருக்கலாம் என்று
அந்நாட்டு அரசாங்கம் நம்புவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலின்
ஹைஃபா நகரில் குறித்த தீ
விபத்தினால் சுமார் 80 ஆயிரம் பேர் தங்கள்
வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜெரூசலத்தில்
புறநகர் பகுதியில் உள்ள வீடுகளும் தீயால்
பாதிக்கப்படும் நிலையில் காணப்படுகிறது. குறித்த விபத்தினால் பாதிக்கப்பட்டோர்
மற்றும் சேதமடைந்த உடைமைகள் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை .
எனினும்,
பெரும் பாதிப்படைந்த பெரும்பாலான மக்கள் வைத்தியசாலையில் சிகிச்சை
பெற்று வருவதாக வெளிநாட்டு செய்திகள்
தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.