தமிழக முதல்வர் ஜெயலலிதா உபகரணம் உதவி மூலம் பேசுகிறார்
- அப்பல்லோ குழும தலைவர் பிரதாப்ரெட்டி
தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தற்போது நல்ல நிலையில் உள்ளார். உபகரணங்கள் மூலம் அவர் சில நிமிடங்கள் பேசுகிறார் என அப்பல்லோ குழும தலைவர் பிரதாப்ரெட்டி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் பேசுகையில் ; முதல்வர் ஜெயலலிதாவுக்கு இப்போது தீவிரமான பிரச்சனை ஏதுமில்லை. ஆதலால் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு அனைத்து உறுப்புகளும் நல்ல முறையில் செயல்படுகிறது. பிஸியோதெரபி சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
உபகரணங்கள் மூலம் அவர் சில நிமிடங்கள் பேசுகிறார். மூச்சுக்குழாய் சிகிச்சை அவருக்கு தரப்படுகிறது. சில நாட்களுக்கு தான் அவருக்கு இதற்கான பயிற்சி தேவைப்படும். தொடர்ந்து தேவைப்படாது.
அவர் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார் ஜெயலலிதா மன வலிமை கொண்டவர். இது அவரது வேகமான உடல் நலத்திற்கு உதவியது.
வீட்டுக்கு அவர் எப்போது செல்ல வேண்டும் என விரும்புகிறாரோ அப்போது செல்லலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.