சாய்ந்தமருது அல்- ஹிலால் வித்தியாலயத்தில்
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற 22 மாணவர்கள்
(எம்.எஸ்.எம். ஸாகிர்)
இவ்வாண்டு நடைபெற்ற தரம் - 05 புலமைப்பரிசில் பரீட்சையில் கல்முனை வலயத்திற்கு உட்பட்ட சாய்ந்தமருது கோட்டத்திலுள்ள பிரபலமான பாடசாலையான சாய்ந்தமருது அல் - ஹிலால் பாடசாலையில் 22 மாணவ மாணவிகள் சித்தி பெற்றுள்ளனர்.
பாடசாலைக்கு பெருமை சேர்த்த இம் மாணவர்களைப் பாராட்டுவதோடு, இம்மாணவர்களுக்காக, இம்மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக இரவு - பகல் பாராது பாடுபட்ட தரம் 05 இன் பகுதித் தலைவர் ஏ.எல். வல்கீஸ் ஆசிரியை அவர்களுக்கும், வகுப்பாசிரியர்களுக்கும் மற்றும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் ஊக்கமளித்த பெற்றோர்களுக்கும் பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.பைஸால், பிரதி அதிபர் றிப்கா அன்சார் மற்றும் அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.
அவர்களின்விபரம்;.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.