திமுக தலைவர் முத்துவேல் கருணாநிதி
மருத்துவமனையில் அனுமதி
திமுக
தலைவர் முத்துவேல் கருணாநிதி சென்னை
ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊட்டச்சத்து
குறைபாடு காரணமாக
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
ராசாத்தி
அம்மாள், திமுக
பொருளாளர் ஸ்டாலின்,
பொன்முடி, தயாநிதி
மாறன் உள்ளிட்டோர்
மருத்துவமனைக்கு உடன் சென்றுள்ளனர். கடந்த மாதம்
25-ம் திகதி
ஒவ்வாமை காரணமாக
கருணாநிதி பாதிக்கப்பட்டு
இருந்தார்.
இதனால்
தொண்டர்கள் அவரை பார்க்க வர வேண்டாம்
என்று திமுக
தரப்பில் அறிவுறுத்தப்பட்டு
இருந்தது. மேலும்,
உடல்நிலை பிரச்சனை
காரணமாக கடந்த
ஒரு மாத
காலமாக பொது
நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை திமுக தலைவர்
தவிர்த்து வந்தார்.
இந்த நிலையில்
அவர் திடீரென
மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க., தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது
குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
கருணாநிதி உடல்நிலை சீராக உள்ளது. கருணாநிதி ஊட்டசத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாடு
தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில்
இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.