அத்தியாவசிய உணவுப் பொருட்களை
சலுகை விலையில் வழங்க நடவடிக்கை
அத்தியாவசிய
உணவுப் பொருட்களை
சலுகை விலையில்
சதொச மற்றும்
கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக வழங்க தொடர்ந்தும்
நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருவதாக கைத்தொழில்
மற்றும் வர்த்தக
அமைச்சு தெரிவித்துள்ளது.
ரூபாவின்
பெறுமானம் குறைந்துள்ள
போதிலும் இறக்குமதி
செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை அதிகரிக்காமல்
நுகர்வோருக்கு தற்போதுள்ள விலையில் வழங்கப்படுவதாக அமைச்சின்
பணிப்பாளர் திருமதி இந்திகா ரணதுங்க தெரிவித்துள்ளார்.
வாழ்க்கைச்
செலவினக் குழு
வாராந்தம் ஒன்றுகூடி
சந்தை விலை
மட்டங்களை ஆராய்ந்து
தேவையான நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment