யாழ்ப்பாணம்சென்னை விமான சேவை
எதிர் வரும் 10 ஆம் திகதி ஆரம்பம்



சென்னை- யாழ்ப்பாணம் இடையிலான வணிக விமான சேவைகள், வரும் 10ஆம் திகதி தொடக்கம் இடம்பெறவுள்ளதாக, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம், எச்எம்சி நிமலசிறி,

அலையன்ஸ் எயர் நிறுவனத்தின் குறிப்பிட்ட நேர அட்டவணைக்கு அமைய விமான சேவைகள் ஆரம்பமாகும். பகல் நேர விமான சேவை மாத்திரம் இடம்பெறும் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம்- சென்னைக்கு இடையிலான ருவழி விமானப் பயணக் கட்டணமாக, 15, 690 ரூபாவும், சென்னை-யாழ்ப்பாணத்துக்கான ஒரு வழி விமான கட்டணமாக, 7,879 ரூபாவும் அறவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையாழ்ப்பாணம் இடையிலான விமானப் பயண நேரம் 32 தொடக்கம் 50 நிமிடங்களாக இருக்கும்என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த விமானப் பயணங்களுக்கான பயணச் சீட்டுகளை  குறித்த விமான நிறுவனங்களின் இணையத்தளங்களின் மூலமாகவும், முகவர்கள் மூலமாகவும் கொள்வனவு செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top