மஹிந்தவின் சாய்ந்தமருது கூட்டத்திற்கு

பலப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு


எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸ கலந்து கொண்டசாய்ந்தமருது கூட்டம் கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக அதிகளவான பொலிஸார் வெளிஇடங்களில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்தனர்.

இன்று காலை 3 பஸ்களில் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்த சுமார் 150ற்கும் அதிகமான பொலிஸார் குறித்த கூட்டத்தின் போது மஹிந்த ராஜபக்ஸவிற்கு பாதுகாப்பு வழங்குவதற்காக வருகை தந்துள்ளதாக பொலிஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மையோன் முஸ்தபா தலைமையில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவிற்கு ஆதரவாக இக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

மேலும் சாய்ந்தமருது பிரதேச சபையை வலியுறுத்தி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸவை ஆதரிக்க சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும் பள்ளிவாசல் பரிபாலன சபை மற்றும் சுயேட்சை குழுவினர் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.









0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top