குழந்தை சுர்ஜித்தின் உடல்
கல்லறையில் காலை நல்லடக்கம்
கண்ணீர்மல்க விடைகொடுத்த மக்கள்

ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்த குழந்தை சுர்ஜித்தின் உடல் மணப்பாறை பாத்திமாபுதூர் கல்லறையில் காலை சுமார் 8.25 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை சுர்ஜித்தின் உடலுக்கு நடுக்காட்டுப்பட்டியை அடுத்த பாத்திமாபுதூர் கல்லறையில் பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அவர்களின் அஞ்சலிக்குப் பின்னர் குழந்தையின் உடலை நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தது. பின்னர், கல்லறையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மண்ணுக்குள் நிரந்தரமாகத் துயில்கொண்ட குழந்தை சுர்ஜித்துக்கு பொதுமக்கள் கண்ணீர்மல்க விடைகொடுத்தனர்.

குழந்தை சுர்ஜித்தின் உடல்முன்பாக அமர்ந்திருந்த அவரது தாயார் கலாமேரி கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறிவருகின்றனர். பொதுமக்கள் அஞ்சலிக்குப் பின்னர் குழந்தையின் உடல் பாத்திமாபுதூர் கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
விடியற்காலை 4.30 மணி அளவில் சிறுவன் சுர்ஜித் உடல் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது






0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top