கல்முனை மாநகர சபையின்
புதிய கட்டடத்திற்கான ஆரம்ப கட்ட
நடவடிக்கையை முன்னெடுப்பது
தொடர்பான கலந்துரையாடல்.
கல்முனை மாநகர சபையின் புதிய கட்டடத்திற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை(26) இடம்பெற்றது.
கல்முனை மாநகர சபையின் நூலக கட்டட தொகுதியில் குறித்த கலந்துரையாடல் மாலை 4 மணி முதல் 6 மணிவரை இடம்பெற்றதுடன் நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சரும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான றவூப் ஹக்கீம் கலந்து கொண்டிருந்தார்.
கல்முனை மாநகர சபை புதிய கட்டடம் தொடர்பாக நீண்ட கலந்துரையாடல் மற்றும் அதனை ஆரம்பித்தல் பிராந்தியத்தில் நகர திட்டமிடல் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம் உள்ளிட்ட குழுவினர் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களுக்கும் தேர்தல் பிரச்சார
நோக்கமாக விஜயம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கலந்துரையாடலில் சுகாதார சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் கல்முனை பிரதி மேயர் காத்தமுத்து கணேஸ், கிழக்கு
மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஏ.எம். ஜெமீல், எம்.எஸ். உதுமாலெப்பை, கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.