சிறுபான்மை
சமூகம்
அச்சமற்ற
சூழலில் வாக்களிப்பதை
உறுதிப்படுத்த
வேண்டும்!
அமைச்சர்
றிஷாட் வலியுறுத்தல்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை சமூகம் அச்சமற்ற
சூழலில் வாக்களிப்பதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் அதற்கு இடைஞ்சல் ஏற்படுத்தும்
வகையில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் சிலர் செயற்படுவதாகவும் அமைச்சர் றிஷாட்
பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் கண்காணிப்பாளர்கள் இந்த குற்றச்சாட்டு தொடர்பில்
தமது அவதானத்தினை கூடியவரை செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் அவதானிப்பு பணிகளில் கண்காணிப்பாளர்களாக
ஈடுபட வருகைதந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியல் ஆய்வாளர் மாரு பொலாண்ட்
தலைமையிலான குழுவினர் இன்று றிஷாட் பதியுதீனை சந்தித்துள்ளனர்.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் அவர்
தெரிவிக்கையில்,
தற்போதைய பிரசாரப் பணிகளில் ஈடுபடும் கட்சியொன்றின்
வேட்பாளருக்கு ஆதரவு திரட்டும் அவர் சார்பில் பரப்புரை செய்வோர், சிறுபான்மை சமூகத்தை அச்சுறுத்தும் தொனியிலும்,
கஷ்டங்களை
எதிர்கொள்ளவேண்டி நேரிடும் என்ற எச்சரிக்கை தொனியிலும் உரையாற்றி வருகின்றனர்.
சுயாதீனமாக வாக்களிக்கும் வாக்காளர்களை அதிலிருந்து
தடுக்கும் அல்லது ஒதுங்கும் செயலாகவே இதனைக் கருதுகின்றோம்.
ஜனநாயக நாடொன்றில் வாக்களிக்கும் சுதந்திரமென்பது மிகவும்
முக்கியமானது. இதனை தடுப்பது என்பது மிகவும் பாரதுாரமான செயலாகும் என்றும்
தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.