நற்பிட்டிமுனையில்
வெடிக்காத
புதிய
கைக்குண்டு மீட்பு
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, நற்பிட்டிமுனையில் வெடிக்காத புதிய கைக்குண்டு
மீட்கப்பட்ட நிலையில் பெரும் அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளது.
நற்பிட்டிமுனை, கிட்டங்கி, சேனைக்குடியிருப்பு, பாண்டிருப்பு வீதியை இணைக்கும் சந்திக்கு அருகாமையில் இன்று (28) காலை குறித்த புதிய கைக்குண்டு
மீட்கப்பட்டுள்ளது.
வீதியோரத்தில் பயணம் செய்த நபர் ஒருவரினால் வழங்கப்பட்ட
தகவலுக்கு அமைய இப்புதிய கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட கைக்குண்டு இயக்கப்பட்டுள்ளதுடன்
வெடிக்கும் நிலையில் காணப்படுவதனால் பிரதான வீதி மற்றும் உள்ளக வீதிகள்
பொலிஸாரினால் போக்குவரத்திற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.