சாய்ந்தமருதுக்கு
தனியான நகர சபை வழங்க
நடவடிக்கை
எடுக்கப்படும்.
“அத” என்ற
சிங்கள நாளிதழில் செய்தி
எமது ஆட்சியின் கீழ் சாய்ந்தமருதுக்கு தனியான நகர சபை வழங்க
நடவடிக்கை எடுக்கப்படும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள்
ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஸ கூறியதாக இன்றைய (2019.10.28) “அத” என்ற சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாய
ராஜபக்ஸவை ஆதரித்து கடந்த வெள்ளிக்கிழமை (2019.10.25) சாய்ந்தமருதில் நடைபெற்ற
தேர்தல் பிரச்சார கூட்டத்தின்போது மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்த மேற்படி கருத்தை
அடிப்படையாக வைத்து இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
'சாய்ந்தமருது மக்கள் மிக நீண்ட காலமாக ஒரு நகர சபையை வேண்டி
போராடி வருகின்றனர். எமது ஆட்சியின் கீழ் அந்த நகர சபையை வழங்குவதற்கு நடவடிக்கை
எடுப்போம். சாய்ந்தமருது சுயேற்சைக் குழுவினர் என்னிடம் கோரிக்கை விடுத்தனர்.
என்னிடம் கோரிக்கை விடுத்தால் கிடைக்கும்' என அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.