மட்டக்களப்பு
சிறைச்சாலையில்
பிள்ளையானை
சந்தித் மஹிந்த
ராஜபக்ஸ!
மட்டக்களப்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள்
விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனை எதிர்க்கட்சி
தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஸ சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இன்று (27) காலை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்ற பொது ஜன
பெரமுன கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஸ தமிழ் மக்கள்
விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபையின்
முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
நேற்றைய தினம் மட்டக்களப்பு வாழைச்சேனையில் நடந்த தமிழ்
மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக
வருகைதந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பாசிக்குடாவில் தங்கியிருந்து தங்களது
ஆதரவாளர்களை சந்தித்ததுடன் இன்று காலை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்று
பிள்ளையானை சந்தித்துள்ளார் எனத் தெரியவருகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 13
கட்சிகள் பொது ஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஸவை
ஆதரித்து பிரசாரம் செய்து வரும் நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மட்டக்களப்பில்
முகாமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வருகை காரணமாக
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் இராணுவ சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு பஸ்களில்
வாகனங்களில் பயணம் செய்த பொதுமக்கள் மிகக் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டு
வருகின்றதுடன் பொதுமக்கள் மீதான பாதுகாப்பு கெடுபிடிகளும் அதிகரித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.