பாகிஸ்தானில் புகையிரதம்
தீப்பிடித்ததில்
73 பேர் பலி 40 பேர் படுகாயம்
பாகிஸ்தானில்
புகையிரதமொன்று தீப்பிடித்ததில் 73 பயணிகள் உயிரிழந்துள்ளதோடு,
40 பேர்
படுகாயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின்
கராச்சி நகரிலிருந்து
ராவல்பிண்டி நோக்கிப் பயணித்த புகையிரதத்திலேயே தீ பரவியுள்ளதாக, வெளிநாட்டுச் செய்திகள்
தெரிவிக்கின்றன.
காலை
உணவை பயணிகள்
சிலர் தயாரித்த
வேளையில் எரிவாயு
சிலிண்டர் வெடித்து
தீ பரவியதாக,
ரயில்வேதுறை அமைச்சர் ஷேக் ரஷீத் அஹமட்
தெரிவித்துள்ளார்.
தீப்பிடித்து
எரியும் புகையிரதத்திலிருந்து
குதிக்க முற்பட்டபோது,
பலர் உயிரிழந்துள்ளதாக,
வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின்
எண்ணிக்கை அதிகரிக்கலாம்
என்று அஞ்சப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.