தமிழில் பேச வேண்டாம்!
கொழும்பில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள
அறிவிப்பு பலகை
கொழும்பிலுள்ள
பிரபல உணவகமொன்றில்
தமிழ் மொழியில்
உரையாட தடை
விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த
உணவகத்தில் ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய
மொழிகளில் மாத்திரமே
உரையாட வேண்டும்
என அறிவிப்பு
பலகை மூலம்
அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு
7 ஹொர்ட்டன் பிளேஷ் பகுதியிலுள்ள பிரபல உணவகமொன்றிலேயே
இந்த தடை
விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,
தமிழ் மொழியில்
உரையாடுவது தம்மை கேலி செய்யும் வகையில்
உள்ளதாக வாடிக்கையாளர்கள்
கூறியுள்ளதாக உணவகத்தின் நிர்வாகம் தெரிவிக்கின்றது.
எனினும் குறித்த பலகைக்கு
பலரும் அதிருப்தி
வெளியிட்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.