சிறையில்
இருக்கும் பிள்ளையானை சந்தித்து
வாழ்த்து
தெரிவித்த மஹிந்த!
முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த
ராஜபக்ஸ கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான சிவனேசத்துரை சந்திரகாந்தனை (பிள்ளையான்)
சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் மட்டக்களப்பு, சிறைச்சாலைக்கு சென்று பிள்ளையானை நேரில்
சென்று சந்தித்து இவ்வாறு மஹிந்த ராஜபக்ஸ வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ
தெரிவிக்கையில்,
முதலில் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் .
மலையக மக்களுக்கு தீபாவளி முற்பணம் கொடுப்பார்கள் அதுவும் இம்முறை
கொடுக்கப்படவில்லை அதற்கும் எமது எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கின்றேன்.
நான் இன்று இங்கு பிள்ளையானை சந்திக்க வந்துள்ளேன் அவரை
பார்த்து பேசினேன் அவருடைய தலைமையில் நேற்றைய தினம் ஒரு பாரிய கூட்டம் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது அதன் காரணமாகவே அவரை வந்து நான் சந்தித்து வாழ்த்து
தெரிவித்துள்ளேன்.
மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன் இம்முறை தேர்தலில் ஒரு
தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும் தப்பான முடிவுகளை எடுக்க வேண்டாம் என்பதை
தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
மக்கள் நல்ல முடிவுகளை எடுப்பார்கள் என நான் நம்புகின்றேன்.
காரணம் இந்த அரசாங்கம் மட்டக்களப்பு மக்கள் மட்டுமல்ல கிழக்கு மாகாண மக்களுக்கு
ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் எவ்விதமான வேலைத்திட்டங்களை செய்யவில்லை என்பதே
உண்மை.
உங்களுக்கு பார்த்தால் தெரியும் மட்டக்களப்பில் நான் செய்த
வேலைத்திட்டங்களை விட ஏதாவது வேலைத் திட்டம் நடைமுறைப் படுத்தபடவில்லை நீங்களே
அதனை பார்க்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.