கோட்டைக் கல்லாற்றில் விபத்துக்குள்ளான
தனியார் பஸ்!
கல்முனைக்கு
திரும்பிக்கொண்டிருந்த தனியார் பஸ்வண்டி ஒன்று கோட்டைக் கல்லாறு பாலத்தில்
விபத்துக்குள்ளானது.
களுவாஞ்சிகுடி
பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
கோட்டைக்கல்லாறு பாலத்தில் விபத்து இடம்பெற்றதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
நித்திரை
மயக்கத்திலே இச்சம்பவம் நிகழ்ந்ததாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட
விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த
விபத்தில் பயணித்த
அனைவரும் தெய்வாதீனமாக
உயிர்தப்பியுள்ளனர்.
பாலத்தின்
பாதுகாப்பு அரன்கள், நடைபாதைகள், ஸ்ரீலங்கா ரெலிகொம்
வயர்கள், பஸ்
என்பன சேதத்திற்கு
உள்ளாகியுள்ளன.
சேதமடைந்த
பாலத்திற்கான செலவு சுமார் மூன்று இலட்சம்
என மதீப்பிடப்பட்டுள்ளது.
களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொறுப்பதிகாரி
ஆர்.எம்.
ரத்நாயக்க தலைமையிலான
பொலிஸ் குழுவினர்
மேலதிக நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.