முகநூல் நண்பர்களுக்கு

அமைச்சர்  றிஷாட் அன்பான வேண்டுகோள்!

நமது உறவுகளே...
நமது சமூகம் மிகவும் நெருக்கடியான கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. இன்றைய சூழலில், கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் நாம் ஒன்று பட வேண்டிய தேவை இருக்கின்றது.
ஜனநாயக நாடொன்றில் பல கட்சிகள் அரசியல் செய்வது வழமையானதே. அந்த வகையில் நமது சமூகத்திலும் பலதரப்பட்ட அரசியல் கட்சிகள் இயங்கி வருகின்றன.
எமது அரசியல் நடவடிக்கைகளை மார்க்க விழுமியங்களுக்கு முரணாகாத வகையில் அமைத்துக்கொள்ள வேண்டிய கடப்பாடும் பொறுப்பும் நம் மத்தியில் இருக்கின்றது.
நம்மை அரசியல் எதிரியாக பார்க்கின்றவர்கள், திட்டமிட்ட அடிப்படையில் பொய்களையும், அபாண்டங்களையும் தொடர்ச்சியாக பரப்பி வருகின்றனர். இவ்வாறான வீண் பழிகளை தாங்கிக்கொள்ள முடியாத நமது ஆதரவாளர்கள், அவர்களுக்கெதிராக தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதி வருகின்றனர்.
தயவு செய்து இவ்வாறான எழுத்துக்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். யாருடைய மனதையும் நாங்கள் நோகடிக்கவோ, புண்படுத்தவோ வேண்டிய அவசியமில்லை. அவ்வாறான எழுத்துக்களை நமது ஆதரவாளர்களும், முகநூல் நண்பர்களும் தயவு செய்து நிறுத்திக் கொள்ளுமாறு அன்பாய் வேண்டுகின்றேன்.

ஊடகப் பிரிவு

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top