உள்ளுராட்சி சபைத் தேர்தல் நவம்பரில்

கட்சித் தலைவர்களின் கலந்துரையாடலில் உடன்பாடு



உள்ளுராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் மாதம் இறுதி வாரத்தில் நடாத்துவதற்கு கட்சித் தலைவர்கள் உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று 16 ஆம் திகதி மாலை அலரி மாளிகையில் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களம் என்பவற்றின் அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இத் தேர்தலில் உறுப்பினர் தெரிவானது 60 வீதம் தொகுதிவாரி முறையிலும், 40 வீதம் விகிதாசார முறையிலும் இடம்பெறுவதற்கும் நேற்று கலந்துரையாடப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top