பேக்கரிகளில் தயாரிக்கப்படும் பொருட்கள், “தயாரிக்கப்பட்ட நாளுக்கு”, முதல் நாளன்றே விற்பனை செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம், நுவரெலியா- பெக்கும்புர பகுதியிலேயே இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிஸ் பொதியிடப்பட்ட பக்கெற்றுகளில், உற்பத்தி செய்யப்பட்ட திகதி என 18.07.2017 திகதி இடப்பட்டுள்ளது. எனினும், அந்த பணிஸ் முதல் நாளான 17.07.2017 அன்றைய தினமே, கடைகளில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தது என நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
பொருட்களை உற்பத்தி செய்த திகதியை, பொய்யாக பொறித்து, இவ்வாறு நுகர்வோரை ஏமாற்றும், பேக்கரி உரிமையாளர்கள் தொடர்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, நுகர்வோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.