பஸ் கவிழ்ந்து விபத்து :
யாத்ரிகர்கள் 16
பேர் பலி!
ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் யாத்ரீகர்கள் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் ரம்பான் மாவட்டத்தில் யாத்ரிகர்கள் சென்ற பஸ் ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயங்களுடன் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ரம்பான் மாவட்ட எல்லைக்குட்பட்ட சாலையில் ஒரு குறுகிய வளைவில் திரும்பியபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோரம் உள்ள பெரிய பள்ளத்துக்குள் உருண்டு கவிழ்ந்தது.
காயம் அடைந்தவர்கள் அனைவரும் அருகாமையில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் இந்த விபத்தின் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.